Friday 27 April 2018

தமிழகத்தில் இலவச ஐஏஎஸ் அகாடமி

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகங்கள் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர்கள் கருத்தரங்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழக மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஐஏஎஸ் அகாடமிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி.... முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                   செய்யுள், உரைநடை,...