Thursday 5 July 2018

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                  


செய்யுள், உரைநடை, துணைப்பாடம், இலக்கணம் என்ற அடிப்படை அலகிலிருந்து 'பொருண்மை' எனும் புதிய கண்ணோட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை தனது நகர்வைச் செய்துள்ளது.
1. மொழி
2. இயற்கை/வேளாண்மை/சுற்றுச்சூழல்
3. பண்பாடு
4. அறிவியல்/தொழில்நுட்பம்
5. கல்வி
6. நாகரிகம்/தொழில்/வணிகம்
7. கலை/அழகியல்/புதுமைகள்
8. நாடு/சமூகம்/அரசு/நிருவாகம்
9. அறம்/தத்துவம்/சிந்தனை
10. மனிதம்/ஆளுமை
                        - எனும் கருத்தியலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை  தனது மாணவச்  சமூகத்தை அடுத்த புலமைத் தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு பாடத்திட்டக்குழுவின்  பெருமுயற்சியும் காரணம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாய்ச்சல் இன்னும் வெகுதூரம் நம்மை அழைத்துச்செல்லும். மாணவ/மாணவியரின் மன வளர்ச்சிக்கு ஏற்பப் பாடுபொருளைத் தேர்வு செய்துள்ளது (உதா. கிழவனும் கடலும்- படக்கதை -காமிக்ஸ்- இதில் முக்கியமானது)

ஆறாம் வகுப்பிலிருந்து  பன்னிரண்டாம் வகுப்புவரை இது தொடர்வதால், தமிழ் சிந்தனை மரபின் தொடர்ச்சி ஆய்வாளர்கள் நிலையில் மட்டுமல்லாமல் பள்ளி மாணவ நிலையிலும் கிடைப்பதன் மூலம் எதிர்காலத் தமிழ்ச் சமூகம் மிகச்சிறந்த அறிவுச்சமூகமாக மாறும் என்பது உறுதி.

குறிப்பு:
புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....அட்டவணையைக் காண்க

Thursday 3 May 2018

பள்ளி மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

*மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.*

மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

*கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:*


* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Monday 30 April 2018

கணினி மயமாகும் பாடங்கள்

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவித்த நிலையில் , தற்போது  1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அவா்களால் நாளை மறுநாள் வெளியிடும் என்று தற்போது அறிவித்துள்ளனா்.

முதல்கட்டமாக, 1 மற்றும் 9-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து பாடமும் முடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். 

பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.  பின்னா்  விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாகவும் பிரித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயா்நிலை படிக்கும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம்  கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மையான மாநிலமாக திகழும் என்று கூறினாா்.

Saturday 28 April 2018

எட்டாம் வகுப்பு வரை இனி ஆன்லைன் தேர்வு

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி


 8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday 27 April 2018

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு மத்திய தேர்வாணையம் வெளியீடு


ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 13 ஆயிரம் பேரில் 2,567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2,567 பேரில் 990 பேர் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2017 க்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் www.upsc.gov.in என்ற முகவரியில் காணலாம்.

தமிழகத்தில் இலவச ஐஏஎஸ் அகாடமி

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகங்கள் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர்கள் கருத்தரங்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழக மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஐஏஎஸ் அகாடமிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி.... முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                   செய்யுள், உரைநடை,...